வியாழன், 9 மார்ச், 2023

கடவுளுக்குரியவர்களாக! (2-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே? இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தின் வாயிலாக தவறிழைத்த மனிதர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொண்டு கடவுளுக்குரிய பாதையில் நடக்க வேண்டும் என்பதை முதல் வாசகம் எடுத்துரைக்கிறது. 

நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பரிசேயர் சதுசேயர் நெறியை காட்டிலும் நமது நெறி புதுமையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் பயணம் செய்தபோது, மற்றவர்கள் கூறியதை கேட்டு அதன் அடிப்படையில் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் சொல்லுகிறவற்றிலும், கற்பிக்கின்றவற்றிலும் எது உண்மை, எது கடவுளுக்குரியது என்பதை கண்டு உணர்ந்தவராக நல்லதொரு நெறியை தன் வாழ்வில் பின்பற்றுகின்ற நபராக இயேசு இருந்தார். இந்த இயேசுவை பின் தொடரக்கூடிய நீங்களும் நானும் நமது நெறியை மற்றவரின் நெறியை காட்டிலும் நல்ல நெறியாக அமைத்துக் கொண்டு நம் வாழ்வு மூலமாக வாழுகின்ற மற்ற அனைவருக்கும் நல்லதொரு முன்மாதிரியாக திகழ்வதற்கான அழைப்பை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு தருகின்றார் எனவே நம்மிடம் சரி செய்யப்பட வேண்டியவைகளை சரி செய்து கொண்டு கடவுளுக்குரியவர்களாக கடவுளின் பாதையில் நாளும் பயணிப்பதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

My Portfolio. ( 2025)