வியாழன், 9 மார்ச், 2023

கடவுளுக்கு உகந்த வாழ்வை தேர்ந்து கொள்வோம்! (4-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

        ஒவ்வொரு நாளும் கடவுளுக்குரிய மனிதர்களாக கடவுளின் சட்ட திட்டங்களை இதயத்தில் ஏற்று அதனை நிறைவேற்றுவதில் நாட்டம் கொள்ளக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் அழகாக எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைவரிடத்திலும் அன்பு காட்டக்கூடியவர்களாகவும் பகைவர்களை மன்னிப்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்ற அழைப்பினை நமக்கு தருகிறார்.  இந்த இயேசுவின் வார்த்தைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு சொல்லிலும் செயலிலுமாக இதனை நிறைவேற்றுகின்ற மனிதர்களாக நாம் வாழுகிற போது, கடவுளுக்கு உகந்த வாழ்வை நாம் தேர்ந்து கொண்டவர்களாக இருப்போம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இத்தகைய இயேசுவை பின்பற்றுகிற மனிதர்களாக நாம் வாழ்தற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...