வெள்ளி, 3 மார்ச், 2023

இயேசுவின் மீது கண்களை பதிய வைப்போம்! (31-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

             ஆண்டவர்   இயேசுவின் மீது நமது கண்களை பதிய வைக்க இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த இயேசுவின் மீது தனது பார்வையை பதித்த இருவரை பற்றி இன்றைய நற்செய்தி வாசக நமக்கு எடுத்துரைக்கிறது.

 ஒன்று யாயீர் என்ற மனிதன். தன்னுடைய மகளின் உடல் நலத்திற்காக ஆண்டவர் இயேசுவை நாடி வருகிறார். நீர் வந்து எனது மகளை தொட்டால் அவள் குணம் பெறுவாள் என்று சொல்லி நம்பிக்கையோடு இயேசுவை அழைத்துச் செல்கிறார் ‌‌.  இன்னொரு புறம் 12 ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒரு பெண்மணி, தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் செலவு செய்தும் குணம் பெற முடியாத நிலையில் ஆண்டவர் இயேசுவின் மீது தனது கண்களை பதிய வைத்தவளாய், நம்பிக்கையோடு அவரின் மேலாடையை தொட்டால் போதும், நான் குணம் பெறுவேன் என்று நம்பிக்கை கொண்டவளாய் இயேசுவின் மேல் ஆடையை தொட்டு குணம் பெறுவதை நாம் வாசிக்க கேட்டோம்.

      இந்த வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் சீர்தூக்கி பார்க்கிற போது, நாம் இந்த இயேசுவின் மீது எத்தகைய கண்களை பதிய வைத்திருக்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம். நம்பிக்கை நிறைந்த மனிதர்களாக நம்பிக்கையோடு இந்த இயேசுவின் மீது நாம் பார்வையை பதிக்கிற போது, இந்த இயேசுவிடமிருந்து நலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது. இந்த இறைவார்த்தை வலியுறுத்தும் வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் ஏற்றுக்கொண்டு இனி வருகின்ற நாட்களில் நம்பிக்கையோடு கடவுளின் மீது நமது பார்வையை பதிய வைக்க ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இன்றைய நாளில் மன்றாடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...