வெள்ளி, 3 மார்ச், 2023

இருப்பதை பகிருவோம்! (4-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

      இன்றைய முதல் வாசகம் நன்மை செய்யவும், நம்மிடம் இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவும் நமக்கு அழைப்பு தருகிறது.  நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கோதுமை மணி போல நாம் மண்ணில் விழுந்து மடிந்து மற்றவருக்கு பயன் தர வேண்டும் என குறிப்பிடுகின்றார். இந்த இயேசுவின் வார்த்தைகளை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது இந்த இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொருவருமே இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒரு முன் உதாரணமாக இந்த வார்த்தைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வு இருக்கிறதா என்ற கேள்வியை நாம் நமக்குள்ளாக எழுப்பிப் பார்ப்போம். நாம் வாழும் இந்த சமூகத்தில் நம்மால் முடிந்த நன்மைகளை தொடர்ந்து செய்து கொண்டே செல்லவும், நம்மிடம் இருப்பது முழுவதையும் பகிராவிட்டாலும், இருப்பதிலிருந்து பகிரக்கூடிய மனிதர்களாக தொடர்ந்து இருக்கவும், அடுத்தவருக்காக நம் வாழ்வையும் இழக்க துணிகின்றவர்களாக நாம் வாழ்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...