வியாழன், 9 மார்ச், 2023

இரக்கம் மிக்க மனிதர்களாக நாளும் வளர்வோம்! (6-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !

           நம் விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நீங்களும் நானும் இரக்கமுள்ள மனிதர்களாக இந்த சமூகத்தில் நாளும் வளர வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள்  நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. 
        நாம் நம்மிடம் இருப்பதை திறந்த மனதோடு அடுத்தவருக்கு இன்முகத்தோடு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். அப்படி கொடுக்கின்ற போது நாம் பல கைமாறுகளை கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்ற ஆழமான நம்பிக்கையினை இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு வலியுறுத்துகின்றன. நம் பகைவர்களை அன்பு செய்து, நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய இரக்கமிக்க மனிதர்களாக நாளும் வளர்வதற்கான ஆற்றல் வேண்டி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...