புதன், 8 மார்ச், 2023

யார் முதல்வர்! (21-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
 ஆண்டவர் இயேசுவின் பணியை செய்ய முன் வந்திருக்கக்கூடிய அனைவருமே எல்லாவிதமான இடர்பாடுகளுக்கு வந்து அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் ஆண்டவருக்கு உரியவற்றை நாடுகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தைகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. இயேசு தனது இறப்பை பற்றி அறிவித்த போது கூட, அதை உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த சீடர்கள் தங்களுக்குள்ளாக யார் அடுத்த முதல்வராக இருக்கப் போவது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தங்களுக்குள் வாதாடி கொண்டிருந்தார்கள். அவர்களின் எண்ணங்களை அறிந்த இறைவன், சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக் கொள்கிறார் என்று சொல்லி ஒவ்வொரு மனிதனும் சிறு குழந்தைகளை போல கடவுளுக்கு உரியவற்றை நாடுகிறவர்களாக கள்ளம் கபடமற்ற நிலையில் அனைவரையும் ஏற்றுக்கொண்டு வாழக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.  இந்த இறைவனுடைய இறைவாக்கு பகுதிகள் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் எடுத்துக் கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும் இயேசுவின் பாதையில் பயணம் செய்ய இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...