புதன், 8 மார்ச், 2023

வாழ்வுக்கு ஈடாய் எதை கொடுப்பது! (17-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 வாழ்வுக்கு ஈடாய் எதை கொடுப்பது, என்ற இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை குறித்து சிந்திக்கவும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளவும் இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு அழைப்பு தருகின்றன.  ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன் என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நமது சுயநலத்தை முன்னிறுத்தி வாழ்வதைவிட பிறர் நலத்தை முந்நிறுத்திய மனிதர்களாக இயேசுவைப்போல நாம் வாழ்கிற போது நம் வாழ்வு அர்த்தமுள்ள ஒரு வாழ்வாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய இறை வார்த்தை பகுதிகள் நமக்கு அழைப்பு விடுகின்றன. இந்த இறை வார்த்தை பகுதிகளின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து, நமது வாழ்வை, நமக்கான வாழ்வு, நமது நலன் என்ற குறுகிய வட்டத்துக்குள் நம்மை சுருக்கி விடாமல்,  மற்றவர் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக இயேசுவைப் போல, இயேசுவாகவே இச்சமூகத்தில் வாழ இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...