வெள்ளி, 3 மார்ச், 2023

நற்செய்தியை பறைசாற்றுவோம் (25-1- 23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
   உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற வார்த்தைகளை ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறுகிறார். நம் ஒவ்வொருவருமே ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை பறைசாற்றுகின்ற மனிதர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் நற்செய்தியை எப்பொழுது நாம் பறைசாற்ற துவங்குகிறோமோ, அப்பொழுது நலம் தருகின்ற பல நல்ல பணிகளை நாம் செய்வோம் என்பதை இன்றைய  இறை வார்த்தை நமக்கு வலியுறுத்துகிறது‌. ஈராயிரம் ஆண்டுகளாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற இந்த இயேசு கிறிஸ்துவை எத்தனை நபர்களுக்கு நாம் அறிவித்திருப்போம் என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம்.  திருமுழுக்கு வாயிலாக இந்த இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கான ஆற்றல் பெற்றிருக்கக் கூடிய நாம் ஒவ்வொருவரும் அப்பணியினை தொடர்ந்து செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...