புதன், 8 மார்ச், 2023

தெளிவு பெறுவோம்! ( 16-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

                 இன்றைய முதல் வாசகத்தில் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை கடவுள் எடுத்துரைக்கிறார். பெரிய அழிவிலிருந்து காத்து வந்த கடவுள் ஒவ்வொருவரும் மற்றவர் மீது அன்பு உறவு கொள்ள வேண்டும்; அந்த அன்பு உறவில் நிலைத்திருக்க வேண்டும்; யாரும் யாருக்கு எதிராக தீங்கு விளைவிக்க கூடாது என்பதை எடுத்துரைப்பதை முதல் வாசகமாக நாம் வாசிக்கக் கேட்டோம். 

    நற்செய்தி வாசகத்திற்கு கடந்து செல்லுகிற போது இயேசு தன்னை யார் என மக்கள் எண்ணுகிறார்கள் என்ற கேள்வியை சுற்றி இருந்த தன் சீடர்களிடத்தில் எழுப்பி தான் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற புரிதலை வெளிப்படுத்துகின்றார். பல நேரங்களில் மனிதர்கள் ஆகிய நாம் நம்மை குறித்து மற்றவர் என்ன எண்ணுகிறார்கள் என்பதில் அதிக கவனம் கொடுக்கின்றோம். ஆனால் பல நேரங்களில் நாம் நம்மை குறித்து என்ன உணர்ந்து வைத்திருக்கிறோம் என்பதற்கு செவி கொடுக்க மறந்தவர்களாக இருக்கின்றோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மற்றவர்களின் பார்வையையும் அறிந்திருந்தார். அதே சமயம் தன்னை குறித்த ஒரு ஆழமான புரிதலையும் கொண்டிருந்தார்.  அந்த புரிதலின் அடிப்படையில் தான் அவர் தன்னை குறித்து புகழ்ந்து பேசுகின்ற போதும் சரி, தன் வாழ்வில் கடவுள் வெளிப்படுத்த விரும்புகின்ற திட்டத்தை அறிவிக்கின்ற போது, அந்த திட்டத்திற்கு எதிராக பேசுகின்ற போதும் சரி,  அவர்களை உடனிருந்து சீடர்களை கடிந்து கொள்ளக்கூடியவராக இயேசு இருக்கின்றார்.

 தன்னை குறித்து தெளிவு கொண்டிருந்த இந்த இயேசுவின் மனநிலை நமது மனநிலையாக மாறிடவும், நாமும் நம்மை குறித்து இன்னும் ஆழமாக அறிந்து கொள்ளவும், அந்த புரிதலோடு கடவுளை அனுதினமும் நாடவும் அவர் காட்டிய அன்புப் பாதையில் நிலைத்திருக்கவும் ஆற்றல் வேண்டி தொடர்ந்து இன்றைய நாளில் இறைவேண்டலில் ஈடுபடுவோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...