வியாழன், 9 மார்ச், 2023

அருகில் இருப்பவர்களையும் கண்டு கொள்வோம்! (9-3-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
இன்றைய இறை வார்த்தைகள் அருகில் இருப்போரை கண்டுகொள்ள அழைப்பு விடுக்கின்றன. தன் அருகில் இருந்த ஏழை லாசரை கண்டுகொள்ளாத செல்வந்தனை பற்றி இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கக் கேட்டோம். 

 இந்த வாசகப் பகுதியை நமது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்கிற போது, பல நேரங்களில் நம்மோடு வாழ்பவர்கள், தேவையில் இருப்பவர்களை கண்டும் காணாதவர்களாக நமது வாழ்வை செல்வந்தனின் வாழ்வு போல பல நேரங்களில் அமைத்து விடுகிறோம். இத்தகைய நிலையில் இருந்து நம்மை நாமே மாற்றிக் கொண்டு, அருகில் இருக்கக் கூடியவர்களோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு,  அவர்களின் இன்ப துன்பங்களில் எல்லாம் உடன் இருக்கக்கூடியவர்களாக நீங்களும் நானும் இருப்பதற்கான அழைப்பை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்ப்போம்.  உடன் இருப்பவரின் துன்பங்களை கண்டும் காணாமல் இருந்த தருணங்களுக்காக இறைவனிடத்தில் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டியவர்களாக, நம்மை நாமே சுய ஆய்வு செய்து பார்த்து,  நமது செயல்களை எல்லாம் சரி செய்து கொண்டு, அருகில் இருப்பவரோடு நம்மால் இயன்ற நற்காரியங்களை புரிந்து, நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டியவர்களாக நாம் வளர்வதற்கான ஆற்றலை வேண்டி இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...