புதன், 8 மார்ச், 2023

நன்மைகள் புரிவோம்! (27-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 ஏழை எளியவருக்கு நாம் செய்கின்ற சின்னஞ்சிறிய உதவிகள் அனைத்தும் ஆண்டவருக்கு செய்கின்றது என்று சொல்லி இன்றைய இறைவார்த்தையின் வழியாக நன்மைகளை செய்கின்ற நபர்களாக நாம் வேண்டும்; மனிதநேயத்தோடு சக மனிதனின் தேவையை உணர்ந்தவராக; துன்பத்தில் வாடுகிறவருக்கும் தேவையில் உழல்பவர்களுக்கும் நாம் துணை புரிய வேண்டும் என்பதை இறைவன் எடுத்துரைக்கின்றார். 

இந்த இறைவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நாம் அமைத்துக் கொள்கிற போது இந்த கடவுளுக்கு உரியவராக அவரது ஆட்சியில் பங்கு பெறுவோம் என்பதை உணர்ந்து கொண்டு நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இந்த இயேசு காட்டுகின்ற பாதையில் தொடர்ந்து பயணிக்க ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...