புதன், 8 மார்ச், 2023

உண்மையாக நோன்பு இருப்போம்! (24-2-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

நோன்பு இருத்தலை குறித்து சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நோன்பு இருத்தல் என்ற பண்பானது நெடுங்காலமாகவே மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்து கொண்டிருக்கக் கூடிய ஒன்று. தங்களை வருத்திக் கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாறுவதை இது குறிக்கிறது. தங்களை வருத்திக் கொள்வதன் நோக்கம் உணவை தவிர்ப்பது மட்டும் என்று நினைத்துக்கொண்டு, பெயரளவில் நோன்பு இருப்பவர்களாகவும்,  கடவுளின் கட்டளையை பின்பற்றிய தவறியவர்களுமாக தொடக்கத்தில் இஸ்ராயேல் மக்கள் இருந்தார்கள். அவர்களின் இந்த நிலையை சுட்டிக்காட்டுகின்றவராக இறைவாக்கினர்  எசாயா இருந்தார். எனவே தான் அன்று அவர்கள் பின்பற்றிய நோன்பு முறைகளை குறித்து கேள்வி எழுப்புகின்ற வகையில் இன்றைய முதல் வாசகம் அமைந்திருப்பதை நாம் வாசிக்க கேட்டோம். இயேசுவோடு இருந்த சீடர்களும் கூட மானிட மகன் தங்களை விட்டு பிரிகின்ற நேரத்தில் நோன்பு இருக்க வேண்டும் என இயேசுவும் சுட்டிக்காட்டுகின்றார். நோன்பிருப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்ற நாம் உண்மையான நோன்பு என்பது எது என்பதை குறித்து சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். 
                உணவை தவிர்ப்பது மட்டும் உண்மையான நோன்பு அல்ல நாம் தவிர்க்கின்ற அந்த உணவினை கொண்டு இல்லாதவருக்கு உணவிட வேண்டும் என்ற உண்மைத்தன்மையை  உணர்ந்து கொண்டவர்களாக நம்மை நாமே தயாரிக்கின்ற வகையில் நோன்புகளை மேற்கொண்டு இல்லாதவருக்கு உதவி செய்து நம் வாழ்வை ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக மாற்றிக்கொள்ள இன்றைய இறைவார்த்தை வழியாய் நாம் அழைக்கப்படுகின்றோம். நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு ஆண்டவரோடு உள்ள உறவில் இன்னும் ஆளப்பட நம்பிக்கையோடு இன்றைய நாளில் இறைவேண்டல் செய்வோம்; இறைவன் தொடர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...