வெள்ளி, 3 மார்ச், 2023

சின்னஞ்சிறு செயல்களும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும்! (27-1-23)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் !
       ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறையாட்சியை ஒரு சிறிய கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார். அதாவது மண்ணில் வாழுகிற ஒவ்வொரு மனிதனுமே சின்னஞ்சிறிய செயல்கள் மூலமாக இறையாட்சியை மண்ணில் மலர்விக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்து உணர்த்துகிறார். நாம் செய்கிற சிறிய செயல் எப்படி இறைவனது ஆட்சியை இந்த மண்ணிற்கு கொண்டு வரும் என்ற கேள்வி நம்மிடம் எழலாம். எப்படி ஒரு சிறிய விதையானது முளைத்தெழுத்து பல பறவைகள் வந்து தங்குவதற்கான இடமாக மாறுகிறதோ அதுபோல நாம் செய்கின்ற சின்னஞ்சிறிய செயல்கள் அனைத்துமே காணுகிற பல மனிதர்களால் தங்கள் வாழ்விலும் பின்பற்றப்பட்டு, அது மிகப்பெரியதாக வளரும் என்பதை இன்றைய இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சியை இந்த மண்ணில் மலர்விப்பதற்கு நீங்களும் நானும் சிறு விதைகளாக, சின்னஞ்சிறிய செயல்கள் மூலம் இந்த இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிக் கொண்டு அன்போடும் சகோதரத்துவத்தோடும் மனிதநேயமிக்க மனிதர்களாக நாளும் இந்த சமூகத்தில் வாழ்வோம். நம் சின்னஞ்சிறிய செயல்களால் இறைவனுடைய ஆட்சியை இந்த மண்ணில் மலரச் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...